ஐஐடி மாணவி மரணத்தில் பல மர்மங்கள் உள்ளது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

IIT student Fatima death is not suicide, says m.k.stalin

by எஸ். எம். கணபதி, Nov 16, 2019, 09:33 AM IST

ஐ.ஐ.டி மாணவி மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதை அவரது பெற்றோர்கள் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது! இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன.

இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

You'r reading ஐஐடி மாணவி மரணத்தில் பல மர்மங்கள் உள்ளது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை