2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை

சென்னையில் இரண்டாவது நாள் இரவு ஊரடங்கு காரணமாக மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டது. ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதையடுத்து கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை பிறப்பித்தது. இந்த இரவு நேர ஊரடங்கு செவ்வாய்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும்அமலுக்கு வந்தது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய வாகனங்கள் செல்ல மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இரவு 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. விரைவு ரயில்கள் வழக்கம்போல், இரவு நேரங்களில் இயக்கப்படுகிறது. இரவு நேரம் சாலைகளில் வாகனங்கள் இயங்காததால், மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

2-வது நாளாக இரவு நேர ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலைகள் வெறிச்சோடின. தலைநகர் சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மவுண்ட் ரோடு, காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds