இவ்வளவு நேரமாக எங்கே சென்றாய்? - ஆட்டோ டிரைவரால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

school girl abused by auto driver in theni

by Sasitharan, Mar 31, 2019, 19:38 PM IST

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (வயது23).இ வர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. பள்ளியில் 12ஆவது பயிலும் 17 வயது மாணவியை ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டியன் ஆசை வார்த்தைகளை கூறி ஆட்டோவில் அடிக்கடி அழைத்து சென்றுள்ளார். சிறுமி தாமதமாக வீட்டிற்கு வருவதை கவனிக்க நேரமில்லாமல் இருந்துள்ளனர் அசிறுமியின் தாயார். ஒரு நாள் வெகு நேரமாகியும் சிறுமியை காணவில்லை என, சிறுமியின் தாயார் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். சிறுது நேர தேடலுக்குப் பின் அந்த சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார்.

இவ்வளவு நேரமாக எங்கே சென்றாய் என அவரது அம்மா கேட்ட போது, ஆட்டோவில் என்னை அழைத்து சென்று தவறாக நடந்தார் தங்கபாண்டியன் என்று கூறியுள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் உடனடியாக போடி காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையின் பேரில் தங்கபாண்டியனை கைது செய்து விசாரித்த போது, மாணவியை ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்கபாண்டியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

You'r reading இவ்வளவு நேரமாக எங்கே சென்றாய்? - ஆட்டோ டிரைவரால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை