நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் : ரூ1.6 கோடி மஞ்சள் பறிமுதல்.

மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 கிலோ மஞ்சளையும், நாட்டு படகையும் க்யூ பிரிவு போலிசார். பறிமுதல் செய்தனர்.

by Balaji, Nov 1, 2020, 16:29 PM IST

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நாட்டுப்படகை ஆய்வு செய்ததில் 73 மூட்டைகளில் சுமார் இரண்டாயிரம் கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது., இதனையடுத்து மஞ்சளையும், நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு போதைப்பொருட்களும் தங்க கட்டிகளையும் கடத்தி வந்த நிலையில் இப்போது மஞ்சள் கடத்தி வருவது அதிகரித்து வருகின்றது. இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மத்திய மாநில உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்படவிருந்த மஞ்சளின் சர்வதேச மதிப்பு 1கோடியே 60 லட்சம் ரூபாய் என போலிசார் தெரிவிவித்தனர்.

You'r reading நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் : ரூ1.6 கோடி மஞ்சள் பறிமுதல். Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை