கடனுக்கு பதிலாக உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய மருத்துவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்த பெண்..

by Logeswari, Nov 6, 2020, 13:38 PM IST

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத பெண்ணிடம் வாரம் மூன்று முறை உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய மருத்துவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின், யூலின் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக லிஃபெங்பிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் லூயோ யுவான்ஜி என்பவர் மருத்துவராக வேலை செய்கிறார். லிஃபெங்பிங் என்ற பெண் கேம்லிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த விளையாட்டிற்கு தேவையான பணத்தை லூயோ என்பவரிடம் அடிக்கடி பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் இவர் விளையாடிய கேம்லிங் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் பணம் முழுவதும் பறிபோகியது.

இதனால் இவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மருத்துவர் லிஃபெங்பிங்கிடம் வாரத்தில் 3 முறை உடலுறவில் இருக்க கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத செவிலியர் அவர் சொன்ன கண்டிஷனை ஏற்று கொள்ளவில்லை. ஆனால் வேறு வழி இல்லாமல் அவருடன் உடலுறவில் ஈடுபட்டார். எப்படியாவது இதலில் இருந்து தப்பிக்க நினைத்த லிஃபெங்பிங் மருத்துவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதனால் லிஃபெங்பிங் வீட்டில் உறங்கி கொண்டிருந்த மருத்துவரை கொலை செய்து உடல் உறுப்புகளை கூர் கூரராக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார். மீதி இருந்த உடல் பாகத்தை கழிவறையில் மறைத்து வைத்திருந்தார். இதனின் வாடை வெளியே வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பெயரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸ் வீட்டை சோதனை செய்த போது மருத்துவரின் உடல் பாகங்கள் கிடைத்தது. இதை வைத்து லிஃபெங்பிங்கை கைது செய்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை வரும் பொழுது லி ஃபெங்பிங்க்கு மரண தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 98,000 யுவான் வழங்கவும் நீதிமன்றம் உத்திரவிட்டது.

You'r reading கடனுக்கு பதிலாக உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய மருத்துவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்த பெண்.. Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை