14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது

by Nishanth, Dec 21, 2020, 13:43 PM IST

14 வயது சிறுமியை வீட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் 1 பகுதியில் உள்ள ஒரு செல்வந்தரின் வீட்டில் 14 வயதான ஒரு சிறுமி வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு 17 வயது சிறுவனுடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து அந்த சிறுவனின் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவனது 3 நண்பர்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில் நான்கு பேரும் சேர்ந்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறினார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் டெல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 17 வயது சிறுவனும், அவனது நண்பர்கள் 3 பேரும் பிடிபட்டனர். இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக் கிழமை தான் தங்களுக்கு புகார் வந்தது என்றும், உடனடியாக விசாரணை நடத்தி 4 பேரையும் பிடித்து விட்டோம் என்றும் போலீசார் கூறினர்.

You'r reading 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை