வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கேரள சட்டசபை 23ம் தேதி கூடுகிறது

வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக 23ம் தேதி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக கவர்னரிடம் அனுமதி கோர இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த சில வாரங்களாக பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.

சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று மத்திய அரசும், வாபஸ் பெறாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினரும் கூறி வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் போராட்டம் பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமடைந்து வருவதால் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் சங்கத்தினரை மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதற்கிடையே இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்பட சில மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டத் திருத்த திருத்த மசோதாவின் நகலை எரித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரளாவும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக 23ம் தேதி (நாளை மறுநாள்) சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஒரு மணி நேரமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் உள்பட முக்கிய தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள். தொடர்ந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்காக கவர்னரிடம் அனுமதி கோர முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :