மலைப்பகுதியில் நடுங்கவைக்கும் கொலை.. 10 வயது சிறுவனை மொட்டையடுத்து, வாயில் மிளகாய் பொடி தினித்து பயங்கர சித்ரவதை..!

by Logeswari, Feb 10, 2021, 10:36 AM IST

மலைப்பகுதியில் 10 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் கிராமத்திற்கு பக்கத்தில் மல்லேஸ்வரன் என்ற பகுதி உள்ளது. இது மலைகளால் சூழப்பட்ட ஊர். இதனை மலைபிரதேசம் என்றும் கூறலாம். சுத்தமான மூலிகை காற்றில் பல மக்கள்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று விறகுகளை கொண்டுவருவது வழக்கம். அப்படி தான் நேற்று சிலர் விறகுகளை வெட்ட காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கே 10 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சியை பார்த்து விட்டு பயந்து ஓடிவிட்டனர்.

பிறகு அவர்கள் இந்த சம்பவத்தை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுவனின் உடலை பார்வையிட்டனர். அப்பொழுது சிறுவனின் தலை முடிகள் மொட்டையடுத்தும், பிரம்பால் அடித்தது போல உடம்பெல்லாம் இரத்த தழும்புகள் இருந்தது. தோள்களை நெருப்பால் பொசுக்கியது போல் காணப்பட்டது. வாயில் மிளகாய் பொடியை திணித்து இதுவரை போலீஸ் வரலாற்றில் இடம்பெறாத கொடூர கொலையாக இது அமைந்துள்ளது என்று போலீஸ் தெரிவித்துள்ளனர். சிறுவன் பல சித்ரவதைகளை அனுபவித்து துடி துடிக்க இறந்துள்ளான். இச்சிறுவனை பற்றி அங்கு இருக்கும் மக்களிடம் விசாரித்தால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் பக்கத்து கிராமத்தில் 10 வயது சிறுவன் எதாவது வீட்டில் காணமால் போய் உள்ளனரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது.

You'r reading மலைப்பகுதியில் நடுங்கவைக்கும் கொலை.. 10 வயது சிறுவனை மொட்டையடுத்து, வாயில் மிளகாய் பொடி தினித்து பயங்கர சித்ரவதை..! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை