டிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்!

by Madhavan, Apr 9, 2021, 19:10 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நகர்பவி பகுதியில் பிடிஏ லேஅவுட் பகுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் கட்டுமானப்பணி முழுமயடையாத பில்டிங் ஒன்றில் கடந்த செவ்வாயன்று இரவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர், குழந்தையின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அப்பகுதிக்கு வந்த காவல்துறை என்ன நடந்தது என்பது குறித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரில் உள்ள மல்லத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் சுதா, இவர் நகரில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடைய கணவர் ஈரண்ணா தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் ஒரு மகள் 3 வயதாகும் வினுதா.

செவ்வாய்கிழமையன்று வழக்கம்போல
மதியம் 2 மணியளவில் ஈரண்ணா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டில் அவருடைய மகள் வினுதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். உடனே டிவியின் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிய ஈரண்ணா, செய்திச் சேனல் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தார். எந்நேரமும் செய்தி சேனல்களை பார்ப்பதா என கோபம் கொண்ட அவருடைய மனைவி ஆத்திரம் அடைந்து கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், `எப்போதும் செய்தி சேனல்களை மட்டுமே பார்ப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரவேண்டாம் எனவும் ஆவேசமாக அதட்டியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே சண்டை கடுமையானது. இதற்கிடையில் அவரது குழந்தை தந்தைக்கு ஆதரவாக தாயிடம் பேசியிருக்கிரார். அப்பாவே டிவி பார்க்கட்டும், அம்மாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என அக்குழந்தை கூறியிருக்கிறது. உடனே கடும் கோபமடைந்த தாய் சுதா தன்னிலை இழந்து பிஞ்சுக் குழந்தையை கொலை செய்திருக்கிறார்.

ஆனால் குழந்தையை கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல ஜனபாரதி காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்திருக்கிறார். மல்லத்தஹள்ளி அருகே கடை ஒன்றில் சாட் உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தனது மகள் தொலைந்து போனதாக அவர் புகார் கொடுத்திருந்தார்.

இதனிடையே குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், மகளை காணவில்லை என புகார் கொடுத்த பெற்றோரை வரவழைத்து விசாரித்த போது தனது குழந்தையை ஆத்திரத்தில் கொலை செய்ததை அந்தத் தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெறும் டிவி பிரச்னைக்காக குழந்தையை தாயே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading டிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை