`கர்ணன் படத்தை கொண்டாடுவோம் – படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்!

by Simon, Apr 9, 2021, 18:50 PM IST

கர்ணன் படத்தை கொண்டாடுவோம் என்று இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்தது. பலரும் படத்தை கொண்டாடி தீர்த்தனர். அந்த படத்தின் கதையை தனுஷை மனதில் வைத்து எழுதியதாக பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது இரண்டாவது படமாட கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில், தாணு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு காரணமாக இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்தது. திட்டமிட்டபடி கர்ணன் வெளியாகும் என்று ரசிகர்களின் சந்தேகத்தை தாணு போக்கினார். அவர் சொன்னபடி இன்று கர்ணன் தமிழகமெங்கும் வெளியானது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் மாரி செல்வராஜ், தாணு, படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட கர்ணன் படக்குழுவினர், ரசிகர்களுடன் முதல்காட்சியை கண்டு களித்தனர். படம் மிகச்சிறந்த விமர்சனத்தை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. முதல்காட்சி பார்த்த இயக்குநரும், பரியேறும் பெருமாளை தயாரித்தவருமான ரஞ்சித், ட்விட்டரில் படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

"கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான். மாரி செல்வராஜின் வியக்கத்தக்க திரைமொழி, தனுஷின் அபாரமான நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் அசாத்திய வேலைப்பாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு நன்றிகள். கொண்டாடுவோம்!" என்று அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் விமர்சனம் தான் திரையுலகத்திலிருந்து கர்ணன் படத்திற்கு வந்த முதல் பாராட்டு பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading `கர்ணன் படத்தை கொண்டாடுவோம் – படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை