புழல் சிறையில் பயங்கரம்... கைதி படுகொலை!

புழல் சிறையில் கைதி கொலை!

by Radha, Jun 20, 2018, 16:42 PM IST

சென்னை புழல் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில், பாக்சர் முரளி என்ற ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Puzhal Jail

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி பாக்சர் முரளி, கடந்த சில தினங்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று சிறை கழிவறையில் வைத்து, பாக்சர் முரளியின் எதிர் கோஷ்டியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளான சக சிறை கைதிகள், கார்த்தி, ரமேஷ், ஜோசப், பிரதீப் குமார், சரண்ராஜ் ஆகிய ஐந்து பேரும், பாக்சர் முரளியை திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முரளிக்கு காவல்துறையினர் முதலுதவி அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு முரளியை கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், சிறைக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அனுமதித்தது, எதிர் கோஷ்டி என தெரிந்தும் இருவரும் ஒரே இடத்தில் சேரவிட்டது எப்படி என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

6 கைதிகளுக்கு 1 போலீஸ்காரர் என்ற விகிதத்தில் சிறைக்குள் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டு புழல் சிறையில் சுமார் 100 கைதிகளுக்கு 1 போலீஸ் பாதுகாப்புதான் அளிக்க கூடிய நிலையில் காவல்துறை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதும் இதுபோன்ற கொலைகளுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

You'r reading புழல் சிறையில் பயங்கரம்... கைதி படுகொலை! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை