சென்னையில் அதிர்ச்சி: வறுமையில் தவித்ததால் மகனை கொலை செய்த தாய்

சென்னை ஆலந்தூர் அருகே போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்ததால் கண்பார்வையற்ற மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த அவலம் அரங்கேறி உள்ளது.
சென்னை ஆலந்தூர் பட்ரேடு நஸ்ரத் புரத்தை சேர்ந்தவர் பத்மா. கணவரை பிரிந்து வாழ்ந்த இவருக்கு 13 வயது கண்பார்வையற்ற மகன் பரத் இருந்தார். போதிய வருமானமின்றியும், மகனை வளர்க்க வழி தெரியாமலும், இருந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று தனது மகன் பரத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பத்மா. ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர். 
 
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தோமையார் மலை போலீசார் விசாரணை நடத்தினர். 
 
அப்போது கணவரை பிரிந்து பத்து வருடங்களாக கண்பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு வருமானம் இல்லாமல் வாழ வழி தெரியாமல் அவதிப்பட்டு வந்த தன் மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், கடைசி நேரத்தில் மனம் மாறி மகனை காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதும் அதிர்ச்சி அடைந்ததாக தாய் பத்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds