கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற பேருந்து விபத்து:20 பேர் பலி

by Isaivaani, Dec 25, 2017, 14:03 PM IST

மனிலா: பிலிப்பைன்ஸ், ஆகோ நகரில் இருந்து மனோவோக் நகரில் உள்ள தேவாலயத்திற்கு பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரை சேர்ந்தவர்கள் மனோவோக் நரில் உள்ள தேவாலயத்தில் நடைபெறுள் சிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக சிறிய பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, செல்லும் வழியில் ஏதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாயினர். இதில், காயமடைந்த பலரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான், வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற பேருந்து விபத்து:20 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை