பள்ளி மாணவி கழுத்தை அறுத்த ஆசிரியர்!

Harassment issue hindi teacher attach 9th class girl student in kurnool

by Manjula, Nov 5, 2018, 11:45 AM IST

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த  மாணவி சந்தியா அங்குள்ள உயர் நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார், அந்த மாணவியிடம் பள்ளியில் பணி புரியும் இந்தி ஆசிரியர் அடிக்கடி பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளார் ஆனால் அதில் இருந்து தொடர்ந்து தப்பி வந்த மாணவியை இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் சங்கர் அந்த மாணவி வகுப்பில் தனியாக இருக்கும்போது பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போதும் மாணவி தப்பி வந்துள்ளார்.

இதனால் பயத்தில் சந்தியா இகு குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார் இதையடுத்து கோபமடைந்த தாயார், பள்ளிக்குச் சென்று சங்கருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் கோபம் அடைந்த இந்தி ஆசிரியர் மறு நாள் காலை குடிபோதையில் மாணவி சந்தியா வீட்டில்  இருந்த போது, அங்கு வந்த சங்கர் அவரின் கழுத்தை பிளேடால் அறுத்தார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அங்கு வந்து, மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவியை தாக்கிவிட்டு ஆசிரியர் சங்கர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் அதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் சங்கரை கடுமையாக தாக்கிய பொது மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த சந்தியா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You'r reading பள்ளி மாணவி கழுத்தை அறுத்த ஆசிரியர்! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை