`10 மணி வரைக்கும் நல்லா தான் பேசுனா அதுக்குள்ள எப்படி இது முடியும் - சேலம் இளம்பெண் மரணத்தில் மர்மம்!

சேலம் அம்மாப்பேட்டைபகுதியைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் - தீபிகா தம்பதியினர். 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த இவர்களுக்கு முகிலன் என்ற மகன் உள்ளார். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சமீபகாலமாக புயல் வீசத் தொடங்கியது. அறிவழகன் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது.

அதன்படி நேற்று இரவும் இதே காரணத்துக்கு இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை நடந்துள்ளது. சிறிது நேரத்தில் சண்டை முடிந்த நிலையில் அறிவழகன் குடும்பத்தினர் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் தீபிகா தூக்குபோட்டு கொண்டதாகவும், உதவ வாருங்கள் என அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீபிகாவை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே தீபிகா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் தீபிகா இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தீபிகா தற்கொலை குறித்து அறிந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் ஊருடன் திரண்டு அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். தீபிகா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் புகார் கூறினர்.

இதுகுறித்து தீபிகாவின் தாயார் போலீஸில் அளித்த புகாரில், ``இரவு 10 மணி வரை தீபிகா என்னிடம் நன்றாக தான் பேசிக்கொண்டிருந்தார். என்னிடம் பேசிமுடித்த கொஞ்ச நேரத்தில் அவர் தற்கொலை செய்துவிட்டார் எனக் கூறினார்கள். இவ்வளவு சீக்கிரம் எப்படி அவர் தற்கொலை செய்திருக்க முடியும். இந்த சாவில் மர்மம் உள்ளது. அறிவழகன் வீட்டினரே அவரை அடித்து கொன்றுவிட்டு தூக்கில் மாட்டியுள்ளார்கள்" எனக் கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது அம்மாபேட்டை போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds

READ MORE ABOUT :