நினைக்கும் போதெல்லாம் டீ குடிக்கலாம்.. நீண்ட ஆயுள் பெறுங்கள்..

by Logeswari, Feb 19, 2021, 15:27 PM IST

இவ்வுலகத்தில் டீ மற்றும் காபிக்கு தனி தனி ரசிகர்கள் இருப்பார்கள். இந்த கடையில் டீ நல்லா இருக்கும் என்று யாராவது சொன்னால் முதலில் அதை சுவைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். முதலில் ஒரு சுவைக்கு ஆரம்பித்து கடைசியில் ஒரு நாளைக்கு 2 டீ குடித்தே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். சிலரது மனதில் டீ குடித்தால் மட்டுமே சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொள்வார்கள். டீ குடிப்பதனால் சுறுசுறுப்பை மெதுவாக இழந்து விடுவதோடு இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.

இதனால் செயற்கை நிறைந்த டீயை குடிக்காமல் சங்கு பூவினால் ஆன ப்ளூ டீ குடித்து பாருங்கள். இது மிகவும் உடல் நலத்திற்கு நல்லது. சங்கு பூ இயற்கை நமக்கு வழங்கிய வரப்பிரசாதம். இந்த பூவை தேடி அலையாமல் எளிதில் கிடைக்க கூடியது ஆகும். சங்கு பூ உடலில் உள்ள குடல் புழுக்களை நீக்க உதவுகிறது. கர்ப்பப்பை சம்மந்தமான எல்லா தடைகளையும் தீர்க்கும் வலிமை இதற்கு உண்டு. இதனால் ப்ளூ டீயை பெண்கள் குடிப்பது அவசியமானது. முதலில் செடிகளில் இருந்து சங்கு பூவை பறிக்க வேண்டும். அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து சங்கு பூவை அதில் போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்த பிறகு தேவையான அளவு எலுமிச்சை சாறை சேர்க்கவும். சேர்த்தவுடன் சங்கு டீ ப்ளூ நிறத்தில் மாறிவிடும். இந்த கலரை பார்க்கும் பொழுது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை தேனோடு சேர்த்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை தினமும் ஒரு வேளையாவது குடித்தால் கர்ப்பப்பை சார்ந்த எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடும். இதனை குடிக்க கால அவகாசம் எதுவும் கிடையாது நினைக்கும் நேரத்தில் குடித்து மகிழுங்கள். நீண்ட ஆயுள் பெறுங்கள்.

You'r reading நினைக்கும் போதெல்லாம் டீ குடிக்கலாம்.. நீண்ட ஆயுள் பெறுங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை