ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் - திருமணத்தன்று கால்பந்து விளையாட சென்ற வீரருக்கு குவியும் பாராட்டு!

இந்தியாவில் கால்பந்துக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள மாநிலம் என்றால் நமது அண்டை மாநிலமான கேரளாவை குறிப்பிடலாம்.

நம் ஊர்களில் கிரிக்கெட் விளையாடுவதை போல அங்கு மூலை முடுக்கெல்லாம் கால்பந்து விளையாடுவதை பார்க்கலாம். அதேபோல் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த 'சுடானி ஃப்ரம் நைஜீரியா'; கேப்டன் போன்ற படங்களும் மலையாள நாட்டில் வெற்றி பெற தவறவில்லை.

இந்நிலையில் கேரளாவில் 7எஸ் லீக் என்ற பிரபலமான உள்ளூர் கால்பந்து தொடரில் ஃபிஃபா மஞ்சேரி அணிக்காக விளையாடி வருபவர் தான் ரீத்வான். மலபுரத்தைச் சேர்ந்த இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எதிர்பாராதவிதமாக திருமண நாளன்று அவரின் அணிக்கு போட்டி இருந்தது. கால்பந்து போட்டியின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்ட ரித்வானால் திருமணத்தை தள்ளி போட முடியவில்லை. அதேநேரம் போட்டியில் பங்கேற்கவும் ஆசைப்பட்டார். அதனால் திருமண நாள் அன்று காலை மணப்பெண்ணின் அறைக்கு சென்று அவரிடம் தனது ஆசையை கூறி "எனக்கு சிறிது நேரம் அனுமதி கொடு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்துவிடுவேன்" எனக் கூறிவிட்டு மணப்பெண்ணின் அனுமதியோடு போட்டியில் பங்கேற்று உள்ளார்.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் மணமகளை கரம்பிடித்துள்ளார். ரித்வானின் செயலால் பெண் வீட்டார் வருத்தமடைந்தாலும் மணப்பெண் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொண்டதால் அவர்களும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வலைதளங்களில் வைராலக இந்தச் செய்தி வலம் வர மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் ரித்வானை வெகுவாக பாராட்டியுள்ளார்.

ரித்வானின் செயலை பாராட்டி டுவிட்டரில், "மணப்பெண் அனுமதி பெற்று போட்டியில் கலந்துகொண்டு உள்ளார். இதன் மூலம் கால்பந்தில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது எனத் தெரிகிறது. எனக்கு ரித்வாணை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது." என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds