நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிப்பதா? மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷனை கண்டித்த உச்சநீதிமன்றம்!

நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்ததாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்ததைக் கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினர்.

சிபிஐ தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பற்றி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டுவிட்டரில் விமர்சித்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுத்ததாக வேணுகோபால் மீது பூஷன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால் பூஷன் மீது அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண்மிஸ்ரா, நவீன் சின்கா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது நீதிமன்ற நடவடிக்கைகளை மீடியாக்கள், மற்றவர்கள் விமர்சித்தாலும் ஒரு வழக்கறிஞராக விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரசாந்த் பூஷனை கண்டித்ததுடன், அவருக்கு நோட்டீசும் வழங்கினர்.


தம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க பிரசாந்த் பூஷன் 3 வார அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 7-ந் தேதிக்கு நீதிபகிகள் ஒத்தி வைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :