காஷ்மீரில் பாக்.தீவிரவாதிகள் வெறித்தனம்: சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் தகர்ப்பு - 30-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகன அணிவகுப்பு மீது குண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் பாகிஸ்தான் தீவிரவாதிகள். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான சோகம் நடந்துள்ளது.

விடுமுறை முடிந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் சேருவதற்காக 2500 சி ஆர்பிஎப் படை வீரர்கள் 78 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். ஜம்மு - ஸ்ரீநகர், நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா என்ற இடத்தில் வாகனங்கள் சென்ற போது எதிரே அதிவேகமாக வந்த மர்ம வாகனம் ஒன்று வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது மோதியது. அப்போது பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டு வீரர்களின் வாகனங்கள் சின்னாபின்னமானது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஐத் தாண்டியது.

இந்த மோசமான தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சமீப காலத்தில் இந்திய பாதுகாப்பு படை மீது நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதல் இதுவாகும். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :