`நாம் என்ன செய்தாலும் ஈடு ஆகாது - உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு கரம் கொடுக்கும் சேவாக்!

இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தினமாக நேற்று முன்தினம் அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைகொள்ள செய்துள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு உரிய விலையை தீவிரவாதிகள் அனுபவிப்பார்கள் என ஒற்றை குரலாக இந்தியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு தனி விமானங்களில் கொண்டுசெல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசாங்கள் நிதி உள்ளிட்ட உதவிகளை அறிவித்து வருகின்றன. இதேபோல் மற்றவர்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த ராணுவ வீரர்கள் அனைவரது குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார். இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து உயிரிழந்த அத்தனை வீரர்களின் புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் எவ்வளவு செய்தாலும் இறந்தவர்களின் தியாகத்துக்கு ஈடு ஆகாது. இருப்பினும் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு நான் நடத்தி வரும் சேவாக் இன்டெர்நேஷ்னல் பள்ளி மூலம் இலவசமாக கல்வி அளிக்க தயாராக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அவரின் அறிவிப்பு வரவேற்புகள் குவிந்துள்ளன. இதேபோல் மற்ற பிரபலங்களுக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை குவிந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds