அசிங்கத்தின் உச்சகட்டம் - 8 மாத பச்சிளம் குழந்தை பாலியல் பலாத்காரம்

புதுடெல்லியில் 8 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லியின் மேற்கு சுபாஷ் நகரின் சகர்பூர் பஸ்தி பகுதியில் வீட்டில் சூரஜ் என்பவர் குடியிருந்துள்ளர். இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது 8 குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த 8 மாத குழந்தையை வெளியே கூட்டிச் செல்வதாகக் கூறிவிட்டு சூரஜ் (28) என்பவர் குழந்தையை ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர், குழந்தையை வீட்டில் கொண்டு படுக்க வைத்துள்ளார். குழந்தையின் தாய், வீடு திரும்பியபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. மேலும், குழந்தையின் பாலுறுப்பிலிருந்து கடுமையான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தையை சோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், சூரஜ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சூரஜ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி ஜெய் ஹிந்த் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், ”மோசமான சம்பவம் நடந்துள்ளது. தலைநகரத்தில் 8 மாத குழந்தை கற்பழிக்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார். ஒருவரும் இந்த அமைப்பை கேள்வி கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds