கைதிகளே இல்லையாம்.. தெலுங்கானாவில் 5 கிளைச்சிறைகளுக்கு மூடுவிழா

Feb 5, 2018, 18:32 PM IST

ஐதராபாத்: அரசு எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கையால் மாநிலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதன் எதிரொலியாக 5 கிளைச்சிறைகள் மூடப்படுவதாக தெலுங்கானா மாநில சிறைத்துறை அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் மற்றும் சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடைக்க 35 கிளைச்சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நிசாமாபாத், வாரங்கால், கம்மம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கிளைச்சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் அவற்றை மூட அம்மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி அதிகாரி கூறியதாவது: மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், முதற்கட்டமாக 5 கிளைச்சிறைகள் மூடப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3 கிளைச் சிறைகளை மூட திட்டமிட்டுள்ளது.

மேலும், சிறையில் இருந்து விடுதலையாகும் கைதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் முயற்சியிலும் சிறைத்துறை ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 100 பெட்ரோல் பங்குகள் மற்றும் சிறு தொழில் ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட பணிகள் அமைத்துத் தரப்படும்.

மேலும், தற்போது மூடப்படும் இந்த 5 கிளைச் சிறைகளையும் அண்டை மாநிலங்களில் உள்ள கைதிகளை அடைக்க வாடகைக்கு விடும் திட்டத்தை அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading கைதிகளே இல்லையாம்.. தெலுங்கானாவில் 5 கிளைச்சிறைகளுக்கு மூடுவிழா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை