தீயிட்டு எரித்தாலும் நீங்கள் தப்ப முடியாது மோடி ஜி! -ராகுல் விளாசல்

Modi ji burning files is not going to save you says rahul gandhi

by Suganya P, Apr 30, 2019, 00:00 AM IST

டெல்லி சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில் இன்று திடீரென ‘தீ’ விபத்து ஏற்பட்டது. தீயினை அணைக்க தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம், சேதம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ‘’டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள ரகசிய கோப்புகளை தீ வைத்து எரித்தாலும், நீங்கள் தப்ப முடியாது மோடி ஜி. உங்களுக்கான நியாயத் தீர்ப்பு நாள் நெருங்கி கொண்டிருக்கிறது ’’ என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ராகுல்.

இதனிடையில், தேர்தல் பரப்புரையின் போது ரஃபேல் ஊழல் குறித்து பேசுகையில், பிரதமர் மோடியை திருடன் என்று கூறியதற்காக மன்னிப்பு தெரிவித்திருந்தார் ராகுல். 

You'r reading தீயிட்டு எரித்தாலும் நீங்கள் தப்ப முடியாது மோடி ஜி! -ராகுல் விளாசல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை