பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 35 பேர் பலி

32 killed after bus plunges into gorge in Jammu and Kashmirs Kishtwar

by எஸ். எம். கணபதி, Jul 1, 2019, 12:32 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரிய பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 35 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்முவில் இருந்து 230 கி.மீ. தொலைவில் உள்ள கிஸ்ட்வார் மாவட்டம், கேஸ்வான் பகுதியில் ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பஸ் சாலையை ஒட்டியுள்ள பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 32 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 18க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதிக்கு மீட்பு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் நான்கைந்து பேர் வரை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால்தான், பஸ் நிலைகுலைந்து பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று மாவட்ட துணை ஆட்சியர் ஆங்கிரஸ் சிங் ராணா தெரிவித்தார்.

துபாயில் தடுப்பில் பஸ் மோதி 8 இந்தியர் உள்பட 17 பேர் பலி

You'r reading பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 35 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை