5 முறை ஆஞ்சநேயர் நாமம் சொன்னால் பருவநிலை பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் - பாஜக எம்.எல்.ஏ. புது ஐடியா

பருவநிலை பாதிப்புக்களை, ஆஞ்சநேயர் நாமம் சொல்வதன் மூலம் தடுக்க முடியும் என்று, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளார்.

Feb 14, 2018, 10:55 AM IST

பருவநிலை பாதிப்புக்களை, ஆஞ்சநேயர் நாமம் சொல்வதன் மூலம் தடுக்க முடியும் என்று, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி காலநிலை இன்னும் சில நாட்களுக்கு மோசமாக இருக்கும் என்றனர். முக்கியமாக பயிர்கள் அதிக சேதமடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இது குறித்த விளகத்திற்குத்தான் பாஜக-வின் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் சச்ஷேனா, “காலநிலை பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், முதலில் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்ய வேண்டும்; விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து பூஜை செய்தால் மட்டுமே இது சரியாகும்.

அதுமட்டும் இல்லாமல் தினமும் 5 முறை ஆஞ்சநேயர் வாழ்க, ஆஞ்சநேயர் வாழ்க என்றும் கூற வேண்டும்; அவ்வாறு கூறினால் ஆஞ்சநேயர் அருள் மூலம் எளிதாக காலநிலை சாதகமாக மாறிவிடும்” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது இந்த ஆலோசனை முக்கியமானதுதான் என்றாலும், பாஜக இன்னும் இதை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார்.

You'r reading 5 முறை ஆஞ்சநேயர் நாமம் சொன்னால் பருவநிலை பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் - பாஜக எம்.எல்.ஏ. புது ஐடியா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை