ஜே.என்.யூ மாணவ சங்கத் துணைத்தலைவிக்கு மிரட்டல்!
டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவுக்கு, பலரும் அம்மாணவிக்கு மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் துணைத் தலைவியாகப் பதவி வகிப்பவர் மாணவி ஷேலா ரசித். சமீபத்தில் டெல்லியில் முஸ்லிம் பெண்ணைக் காதலித்த ‘பெருங்குற்றம்’ காரணமாக அப்பெண்ணின் குடும்பத்தாரால் அங்கித் சக்சேனா என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை மையமாக வைத்து மாணவி ஷேலா ரசித் ஒரு பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ஃபேஸ்புக் பதிவினால் தற்போது அம்மாணவிக்கு பாலியல் ரீதியான மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன.
இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அம்மாணவி தற்போது தனது ஃபேஸ்புக் கணக்கை முடக்கி வைத்துள்ளார். அம்மாணவி முஸ்லிம் பெண்களுக்கும் அவரவர் மனதுக்குப் பிடத்தவருடன் வாழ உரிமை வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகிறார்.
You'r reading ஜே.என்.யூ மாணவ சங்கத் துணைத்தலைவிக்கு மிரட்டல்! Originally posted on The Subeditor Tamil
More India News