சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. பெண்கள் வருவார்களா?

பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பெண்கள் வந்தால் தடுப்போம் என்ற இந்து அமைப்புகள் கூறியுள்ளதால் பதற்றமாக காணப்படுகிறது.

கேரள மாநிலம், பந்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை உள்ளது. இங்குள்ள ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஐயப்பன் பிரம்மச்சாரி விரதமிருப்பதால், இந்த கோயிலில் 10 வயது முதல் 50 வயது உடைய பெண்கள் நீண்ட காலமாக அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பான வழக்கில் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ேராகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் நரிமன், சந்திரசூட் ஆகியோர் அளித்த தீர்ப்பில் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த தீர்ப்பில் குழப்பம் உள்ளதாகவும், இது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். காரணம், 7 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் வரை, பெண்களை அனுமதிக்க வேண்டுமா, அப்படி அனுமதித்தால் அது நீதிபதிகள் நரிமன், சந்திரசூட் தீர்ப்பை பின்பற்றியதாகி விடாதா? என்ற கேள்வி எழுந்ததால்தான்.
இந்த சூழ்நிலையில், மண்டல மகர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதற்காக பிற்பகல் 2 மணி முதல் மலையில் ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், சபரிமலை அடிவாரத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் காவி உடையில் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, கோயிலுக்குள் பெண்களை அனுமதிக் வேண்டுமென ேபாராடம் பூமாதா பிரிகேட் திருப்தி தேசாய் மற்றும் சில மகளிர் விழிப்புணர்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ேவாம் என்று கூறியுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து அமைப்புகள், பெண்கள் வந்தால் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளன.

இதனால், பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சபரிமலை கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தந்திரி மகேஷ் காந்தாரு நடையை திறக்கிறார். பந்தனம்திட்டா கலெக்டர் எம்.நுகு கூறுகையில், சபரிமலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்த தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds