ஜார்கண்ட் தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு..

ஜார்கண்டில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று(டிச.20) காலை 7 மணிக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் மட்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் காணப்படுகிறது.

ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. நவ.30ல் தொடங்கிய டிச.16க்குள் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

முதல் கட்டமாக, கடந்த நவ.30ம் தேதியன்று சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேகர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 4 கட்டங்களில் 65 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
இறுதிகட்டமாக இன்று 16 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. போரியோ, பர்கயத், லிட்டிபுரா, மகேஷ்பூர், சிகாரிபரா ஆகிய தொகுதிகளில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதால் மாலை 3 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்படும். மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகின்றன. ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்திமோர்ச்சா(ஜே.எம்.எம்) கூட்டணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

ஆளும் பாஜக முதல்வர் ரகுபர்தாஸ் கூறுகையில், தாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்றார். அவரது தொகுதியில் முன்னாள் அமைச்சர் சர்யூராய் அதிருப்தி வேட்பாளராகி சுயேச்சையாக போட்டியிடுவது அவருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds