ஜார்கண்டில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.. ஜே.எம்.எம்-காங்கிரஸ் அமோக வெற்றி

ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார்.

ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று(டிச.23) காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிட்டது. அதை எதிர்த்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்) கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் 2 கணிப்புகள், ஜே.எம்.எம். தலைமையிலான காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், பாஜகவினர் தாங்கள் 65 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறிவந்தனர்.
இந்நிலையில், கருத்து கணிப்புகளின்படி ஜே.எம்.எம்- காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜே.எம்.எம். 30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி ஒரு இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஜே.எம்.எம். கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா, பர்ஹயத் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மேலும், முதல்வர் ரகுபர்தாஸ் தான் போட்டியிட்ட ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் சர்யுதாசிடம் தோல்வியடைந்தார்.

அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஹேமந்த் சோரன், கடுமையாக உழைத்த தனக்கு இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என்றும் கூறியுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :