திறன் இருந்தும் கடனை திருப்பிச் செலுத்தாத 9 ஆயிரம் பேர் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேர் வங்கிகளில் பெற்ற கடன் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியைச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Loans

கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும் அதனைச் செலுத்தாமல் இருப்பவர்களை ‘திறனுள்ள கடனாளிகள்’ என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அந்த வகையில், 2017 செப்டம்பர் 30 வரை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் பாக்கியை, சுமார் 9 ஆயிரம் பேர் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ள முதல் 11 பேரின் மொத்தக் கடன் அளவு ரூ. 26,000 கோடி என்று தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில், கௌதம் அதானியின் ‘சம்பந்தி’யான ஜதின் மேத்தாவும் இடம் பெற்றுள்ளார்.

இவரின், வின்சம் டைமண்ட் - ஜூவல்லரி மற்றும் பாரவர் பிரீசியஸ் ஜூவல்லரி - டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடன் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடம் பெற்ற கடன் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ மதுபான ஆலையின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெற்ற கடன் ரூ. 3,000 கோடி.

தொழிலதிபர் பிரபோத் குமார் திவாரிக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெற்ற கடன் ரூ.2,416 கோடி. ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் ரூ. 2,730 கோடி கடன் பெற்றுள்ளது. இதேபோல, 50 நிறுவனங்கள் ரூ. 250 கோடிக்கும் மேல் கடன் பெற்றுள்ளன. இந்திய வங்கிகளின் வராக் கடன் அளவு கடந்த ஆண்டில் மட்டும் 27 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds