இதற்கு முன் எங்களைப் போல் எந்த அரசும் செயல்பட்டதில்லை.. உ.பி.யில் மோடி பேச்சு..

எங்களைப் போல் அர்ப்பணிப்புடன், கடுமையாக எந்த அரசும் இதற்கு முன்பு செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் சமூக நீதி முகாம் நிகழ்ச்சி இன்று(பிப்.29) காலை நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். 10,406 மாற்றுத்திறனாளிகள், 16,468 முதியோர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.

விழாவில் மோடி பேசியதாவது:
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. 130 கோடி மக்களின் நலனுக்காக நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் உதவி தேடி அலைந்து திரிந்தார்கள். அவர்களுக்கு யாருமே உதவவில்லை. ஆனால், நாங்கள் அவர்களுக்கும், முதியோருக்கும் அதிகமாக உதவி வருகிறோம். உத்தரப்பிரதேசத்தில் இதற்கு முந்தைய ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.380 கோடி மதிப்பிலான உதவிகளே செய்யப்பட்டன. எங்கள் ஆட்சியில் ரூ.900 கோடி அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு எந்த அரசும் எங்களைப் போல் அர்ப்பணிப்புடன், கடுமையாகச் செயல்பட்டதில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds