ஏர்செல் திவாலாக ரிலையன்ஸ் தான் காரணமா? - டிராய் மீது குற்றச்சாட்டு

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் TRAI)) செயல்படுவதாக ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
 
புதிதாக வந்துள்ள (ஜியோ) தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விதிமீறல்களை, டிராய் கண்டுகொள்ளாமல் விடுவதாலேயே, ஏர்செல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
 
ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு, டெலிகாம் துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் உடனான போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி நிறுவனங்களே திணறி வருகின்றன. தற்போது வேறுவழியின்றி, ரீசார்ஜ் பேக்குகள் மீது இந்த நிறுவனங்களும், விலைக்குறைப்பையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
 
ஏர்டெல் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளரான சிங்டெல், சிலமாதங்களுக்கு முன்பு ரூ. 2 ஆயிரத்து 649கோடியை கையிலிருந்து போட்டது. அப்படியிருந்தும் ஜியோவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
 
மற்றொரு புறத்தில், போட்டியைச் சமாளிக்க முடியாத ஏர்செல், திவாலாகி விட்டது. ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் ஏர்செல் மூடப்படுவதாக டிராய் அமைப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
 
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடி வருவதாகவும், அதிலும் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள், விலைக்குறைப்பு, சலுகைகளில் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
இதனை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையமான ‘டிராய்’ கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் அவர், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடுவதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் புலம்பியுள்ளார்.
 
வோடாபோன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விட்டோரியோவும், சுனில் மிட்டலின் கருத்தை ஆதரித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds