ஒருவேளை உணவைக் கைவிட பாஜகவினருக்கு மோடி அறிவுரை..

பாஜகவினர் ஒருவேளை உணவை மக்களுக்கு விட்டுத் தர வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் 40 பேரிடம் சென்று பிரதமர் நிதிக்கு தலா ரூ.100 அனுப்ப வலியுறுத்த வேண்டும். பாஜகவின் 40வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:கொரோனாவை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜகவின் 40 ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி, பாஜகவினர் செயல்பட்டு, மக்களுக்கு உதவ வேண்டும்.


இவ்வாறு குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல்களையும் பதிவிட்டுள்ளார். பாஜகவின் 40 ஆண்டு தினத்தையொட்டி, பாஜகவினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ள அந்த அறிவுரைகள் வருமாறு:
பாஜக அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் கட்சிக் கொடிகளை ஏற்றுங்கள். கொடியேற்றும்போது, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஊரடங்கால் மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து பாஜக தொண்டர்கள் அனைவரும் ஒருவேளை உணவை விட்டுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் 5 நபர்களுக்கு உணவு பொட்டலங்களையும், முகக்கவசங்களையும் வழங்குங்கள்.

வீட்டிலேயே முகக்கவசங்களை தயாரித்தல் முறை மற்றும் விநியோகிப்பது தொடர்பான வீடியோக்களை #WearFaceCoverStaySafe என்ற ஹேஸ்டாக்கில் பகிர வேண்டும்.
40 ஆண்டு தினத்தில், ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் 40 பேரிடம் PM-CARES நிதிக்கு தலா 100 ரூபாய் செலுத்த வைக்க வேண்டும்.ஒவ்வொருவரும் 40 வீடுகளுக்குச் சென்று, தற்போது பணியாற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதங்களில் கையெழுத்து பெற வேண்டும். ஊரடங்கில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் தபால் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு கையெழுத்திடப்பட்ட நன்றி கடிதங்களை நேரில் வழங்க வேண்டும்.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds