நாளை முதல் எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி.. மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் நாளை முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அவை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் அளித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 15,712 பேருக்கு இந்நோய் தொற்றியிருக்கிறது. 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை அறிவித்த பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லாத பகுதிகளில் வருகிற 20ம் தேதி(நாளை) முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்த சூழலில் நாளை முதல் எந்தெந்த தொழில்கள் அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் கொடுத்துள்ளார். அவை வருமாறு:
ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். விவசாயம் மற்றும் தோட்டத் தொழில்களைத் தொடங்கலாம். மீன்பிடித் தொழிலையும் மேற்கொள்ளலாம். தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் நடைபெறும். இந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பொது விநியோகத் துறை வழக்கம் போல் செயல்படும்.
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு எந்த தடையும் இல்லை. வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஊழியர்களுடன் நிபந்தனைகளை கடைப்பிடித்து இயங்கலாம். கட்டுமானப் பணிகளை சமூக இடைவெளி கடைப்பிடித்துத் தொடரலாம். மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிக்கலாம். மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

இந்த ஊரடங்கு தளர்வுகள், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுக்குப் பொருந்தாது. மேலும், மாநில அரசுகள் இந்த தளர்வுகள் குறித்து தனியே முடிவெடுத்து அறிவிக்கலாம்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds