இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வு.. பலி 543 ஆனது

இந்தியாவில் இன்று(ஏப்.20) காலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆகியிருக்கிறது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.20) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 17,265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 2546 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 14,175 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4203 பேருக்கு நோய் பாதித்துள்ளது. இங்கு 223 பேர் பலியாகியிருக்கின்றனர். இதே போல், மத்தியப் பிரதேசத்தில் 1407 பேருக்குப் பாதித்துள்ளது. 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் 1743 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. 63 பேர் வரை பலியாகியுள்ளனர். டெல்லியில் 2003 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 43 பேர் பலியாகியிருக்கின்றனர்.ஆந்திராவில் 646 பேரும், கர்நாடகாவில் 390 பேரும், தெலங்கானாவில் 644 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இம்மாநிலங்களில் 10, 15 பேர் வரை பலியாகியிருக்கின்றனர்.தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி 1477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 17 பேர் பலியாகி உள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds