ஏழைகளின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.. பிரதமர் மோடி பேச்சு

ஏழைகள், தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தரவுப்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்றாலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரம் கி.மீ. தூரம் கூட நடந்தே சென்றனர். பலர் உயிரிழந்தனர். இதனால், மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன. எனினும், இது வரை வாய் திறக்காமலிருந்த பிரதமர் மோடி தற்போது முதல் முறையாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர் பற்றிப் பேசியுள்ளார்.பிரதமர் மோடி இன்று தனது வழக்கமான மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் கிருமி பரவிய இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினோம். உலக நாடுகளை ஒப்பிடுகையில், அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாடு இந்த சவாலைச் சந்திப்பதில் மிகப் பெரிய சாதனை செய்திருக்கிறது. எதையெல்லாம் சாதித்தோமோ அதெல்லாமே கூட்டு முயற்சியால் தான். அதே போல், எதையெல்லாம் இழந்தோமோ அதற்காகவும் நாம் வருந்துகிறோம்.

இந்த தருணத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டோம். குறிப்பாக, ஏழைகளின், தொழிலாளர்கள் பட்ட துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதே சமயம், ரயில்வே நிர்வாகம் 24 மணி நேரமும் கொரோனா மீட்புப் பணியில் ஈடுபடுபவர்களைக் கொண்டு சேர்ப்பதிலும், பல லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் பணியாற்றியுள்ளது. மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் எல்லாருமே இரவு பகலாக பணியாற்றியுள்ளோம்.

இந்த தருணத்தில் நான் பல நாட்டுத் தலைவர்களுடன் உரையாடிய போது, அவர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பலன்கள் குறித்து அறிந்தனர். நாமும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds