பீகாரில் கார் மீது லாரி மோதி 9 பேர் பலி..

9 dead and one injured in car collided with a truck accident.

by எஸ். எம். கணபதி, Jun 5, 2020, 12:20 PM IST

பீகாரில் கார் மீது சரக்கு லாரி மோதியதில் காரில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் போஜ்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் சென்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த கார் பீகாரில் வாஜித்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.


இந்த விபத்தில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். கார் முற்றிலும் உருக்குலைந்தது. இந்த சம்பவம் குறித்து போஜ்பூர் போலீஸ் எஸ்.பி. அபிஷேக் சிங் கூறுகையில், உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தானில் இருந்து போஜ்பூருக்கு வந்த கார் விபத்தில் சிக்கி விட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

You'r reading பீகாரில் கார் மீது லாரி மோதி 9 பேர் பலி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை