கடுமையாகிறது ஹெச்1பி விசா முறை: சிக்கலில் ஐடி ஊழியர்கள்!

அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா நடைமுறையில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்கக் காங்கிரஸ் செனெட் முடிவு எடுத்துள்ளது.

ஹெச்1பி விசா நிர்வாக நடைமுறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் விதிமுறைகளால் இந்தியர்களுக்கே அதிக சிக்கல்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹெச்1பி விசா என்பது அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் வெளிநாட்டவருக்கான விசா. இந்தியாவில் அதிகப்படியாக இந்த வகையிலான விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.

மேலும் இன்னும் சில நாள்களில் அறிமுகமாகவிருக்கும் புதிய நடைமுறைகள் சிக்கல்களை மேலும் அதிகமாக்குகிறது.

  1. விசா மட்டும் போதாது: அமெரிக்காவில் பணியாற்ற இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு ஊழியர் விசா புதுப்பித்தலுடன் ஹெச்1பி நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றியுள்ளாரா என்பதற்கான அத்தாட்சியும் இனி வரும் காலங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. விசா காலம் குறைப்பு?- இதுவரையில் அதிகப்பட்சமாக இந்தியாவிலிருந்து செல்லும் ஊழியர் ஒருவர் மூன்று ஆண்டுகள் வரையில் அமெரிக்காவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றலாம். ஆனால், இந்த மூன்று ஆண்டு ஒப்பந்தம் என்பது குறைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
  3. ஒப்பந்த விவரங்களை சமர்ப்பித்தல்: தற்போது ஹெச்1பி விசாவுக்கு புதிதாகப் பதிவு செய்பராக இருந்தாலும் ஏற்கெனவே இருக்கும் விசாவை புதுப்பிப்பவராக இருந்தாலும் ஒப்பந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  4. பயண விவரங்கள் சமர்ப்பித்தல்: இந்திய ஊழியர் அமெரிக்காவில் பணிபுரியவிருக்கும் இடத்தில் எப்போது சேருவார், எப்போது ஒப்பந்த காலம் நிறைவுற்று நாடு திரும்புவார் போன்ற பயண விவரங்களையும் முன்கூட்டிய விசா பதியும்போதே சமர்ப்பிக்க வேண்டும்.
  5. மறுப்புக்கு வாய்ப்பு அதிகம்: ட்ரம்ப்பின் ‘அமெரிக்கர்களை மட்டும் பணியமர்த்துவோம்’ என்ற திட்டதை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டுவதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ஹெச்1பி விசாக்கள் தரப்படுவதற்கும் புதுப்பிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds