வீரர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் மறக்காது.. ராஜ்நாத்சிங் பேட்டி

Nation will never forget soldiers bravery and sacrifice, says Rajnathsingh.

by எஸ். எம். கணபதி, Jun 17, 2020, 13:55 PM IST

சீனப் படைகளின் தாக்குதலில் மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது என்று ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.இந்தியாவின் லடாக்கில் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் கடந்த 15ம் தேதி இரவு நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், சீனப் படைகளின் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணித்தது மிகுந்த கவலையைத் தருகிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கு ஏற்போம். நாம் அந்த குடும்பங்களுக்குத் தோள் கொடுத்து உதவுவோம். மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது என்றார்.

You'r reading வீரர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் மறக்காது.. ராஜ்நாத்சிங் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை