கேரளாவில் கொரோனாவிலிருந்து மீண்ட 103 வயது முதியவர்....

இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் அந்த மாநிலத்தில் நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தது. ஜனவரி மாத இறுதியில் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் முதலில் 3 பேருக்கு மேல் நோய் பரவில்லை. ஆனால் மார்ச் மாதத்திற்குப் பின்னர் மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

நேற்றைய கணக்கின்படி தற்போது 16,274 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 31,394 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 1,758 பேர் பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதித்து நேற்று 6 பேர் மரணம் அடைந்தனர். இதுவரை கொரோனா பாதித்து கேரளாவில் 175 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா உள்பட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் நோய் பரவல் குறைவாகும். நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

இந்நிலையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 103 வயதான முதியவர் நேற்று குணமடைந்து தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயதான இந்த முதியவருக்கு அவரது மகன் மூலம் நோய் பரவியது. இதையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி இவர் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிக வயதானவர் என்பதால் மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையிலான சிறப்பு மருத்துக் குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தது.

இந்நிலையில் 20 நாள் சிகிச்சைக்குப் பின்னர் அந்த முதியவர் முழு உடல் நலம் தேறினார். இதையடுத்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல கேரளாவில் ஏற்கனவே 105 வயது மூதாட்டியும், 93 மற்றும் 88 வயதான ஒரு தம்பதியும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :