கொரோனா ஊரடங்கால் உயிரிழந்த தொழிலாளர்கள்.. அரசிடம் புள்ளிவிவரம் இல்லை..

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 62 நாட்கள் நீடித்த ஊரடங்கின் போது, லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரம் கி.மீ. தூரம் நடந்தே சென்று சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் உணவின்றியும், விபத்துகளிலும் சிக்கி இறந்தனர். அதே போல், மே 9ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடப்பட்ட ஷராமிக் சிறப்பு ரயில்களில் சென்ற தொழிலாளர்கள் 80 பேர் வரை உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்பு படையின் புள்ளி விவரம் தெரிவித்தது.



இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? அவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன இழப்பீடுகளை அளித்தது? மாநிலவாரியாக புள்ளி விவரங்கள் வெளியிட முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு மத்திய அரசின் தரப்பில், அது போன்ற புள்ளிவிவரங்கள் எதுவும் அரசிடம் இல்லை என்றும், உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு தரும் கேள்வியே எழவில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.


மேலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், கோவிட் 19 பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள மற்றும் மருத்துவ, சுகாதார வல்லுநர்கள், சுய உதவிக் குழுவினர் என்று எல்லோரும் சிறப்பாக செயல்பட்டனர். ஊரடங்கின் போது மக்கள் பிரச்னைகளை தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் சிறப்பாக கையாண்டன என்று தெரிவித்தார்.

இதையும் பாருங்க: பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு பலவீனமா ?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :