பெண்ணின் விருப்பத்துடன் தான் உறவு வைத்துக் கொண்டேன் - நித்தியானந்தா விளக்கம்

சாமியார் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறிய பெண் அவராகவே விருப்பப்பட்டுத்தான் உறவு வைத்துக் கொண்டார் என்று சாமியார் நித்யானந்தா தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் போலிச்சாமியார் நித்யானந்தா. இவர் மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஆர்த்திராவ் என்பவர் சில வருடங்கள் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது ‘ஆன்மீக பேரின்பம்’ என்ற பெயரில் தன்னை சாமியார் நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் ராமநகரம் போலீசார் நித்யானந்தா மீது புகார் பதிவு செய்து பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பெயரில் நீதிமன்றம் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கடந்த 2012- ஆம் ஆண்டு நித்யானந்தா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அங்கும் சோதனை நடத்துவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி 2014-இல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என முடிவு வெளியானது.

பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ராமநகரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் வழக்கறிஞர் நாகேஷ் ஆஜராகி வாதாடினார்.

அப்பொழுது அவர், ‘நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியிருக்கும் ஆர்த்திராவ் பிடதி ஆசிரமத்தில் பல வருடங்கள் தங்கி உள்ளார். அவர் ஆன்மீக பேரின்பத்துக்காக விருப்பப்பட்டுத் தான் நித்யானந்தாவுடன் உறவு வைத்துக் கொண்டார்” என்று கூறியுள்ளனர்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds