39 இந்தியர்கள் படுகொலை - பிணைக் கைதிகளாக வைத்திருந்த ஐ.எஸ். இயக்கத்தினர்

இராக்கின் மோசூல் நகரில்பயங்கரவாதிகளால் கடத்தி பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்களும் கொல்லப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், பீகார், மேற்குவங்கம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 39 இந்தியர்களை, கடந்த 2014-ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்தினர். இராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்த39 பேரும், மோசூல் நகரை விட்டுவெளியேற முயன்றபோது, சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்களும் மரணமடைந்து விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் செவ்வாய்க்கிழமையன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது குறித்து கூறியுள்ள அவர், “இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இறந்தவர்களின் உடல்கள் இராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது; சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ.காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது; ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவிகிதம் ஒத்துள்ளது.

இதனை உறுதி செய்த பிறகே அவர் களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; அமைச்சர் வி.கே. சிங், இராக்கிற்கு சென்று கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வார்” என தெரிவித்தார்.

 - thesubeditor.com

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds