காய்ச்சலும், மூச்சுத் திணறலும் மட்டுமல்ல சுவை, மணம் இவை தெரியாவிட்டாலும் கூட கொரோனா தான்..!

கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இல்லாமல் இருந்தும், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மை இல்லாவிட்டாலும் கூட கொரோனா உறுதி தான் என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய நிலவரப்படி இதுவரை உலக அளவில் 3 கோடியே 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 64 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

பொதுவாக கொரோனா வைரஸ் பரவினால் காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை தான் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இவை ஒன்றுமே இல்லாவிட்டால் கூட மணம் மற்றும் சுவையை உணரும் தன்மை போனால் அதுவும் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் தான் என்று இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டனில் உள்ள பி.எல். ஓ.எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்த விவரங்கள் வருமாறு: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 78 சதவீதம் பேருக்கும் திடீரென ருசியையும், மணத்தையும் உணரமுடியாத நிலை ஏற்பட்டது. இவர்களில் 40 சதவீதம் பேருக்கும் இருமல், காய்ச்சல் உள்பட கொரோனா நோய்க்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை.

மணம் மற்றும் ருசியை உணரும் தன்மை திடீரென போவது கொரோனாவின் தொடக்க அறிகுறிகள் ஆகும். எனவே இந்நோயைக் கட்டுப்படுத்த அரசுகள் கடுமையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் பரிசோதனை நடத்தும் போது இந்த அறிகுறிகள் குறித்தும் பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 முதல் மே 14 வரை நோய் பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் 590 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :