சிக்கலில் சிக்கித்தவிக்கும் வங்கிகள்.. பட்டியலில் அடுத்து பஞ்சாப் நேஷனல் பேங்க். சின்டெக்ஸ் கம்பெனியால் வந்தது சிக்கல்..

அது என்னவோ தெரியவில்லை.. தற்போது வங்கிகளுக்கு போறாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.தமிழகத்தில் உருவாகிப் புகழ்பெற்ற லட்சுமி விலாஸ் பேங்க் பெரும் சிக்கலைச் சந்தித்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் உருவாக்கிப் புகழ்பெற்ற தனலட்சுமி பேங்க் அடுத்த சிக்கலில் அடியெடுத்து வைத்திருக்கும் வங்கியாக இருக்கிறது.இந்த பட்டியலில் அடுத்து வரவேற்பது பஞ்சாப் நேஷனல் வங்கி. கடன் கொடுத்துக் கொடுத்தே இந்த வங்கி காலாவதியாகி விடும் போலிருக்கிறது.

ஏற்கனவே நீரவ் மோடி என்பவருக்கு 11 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் கொடுத்துவிட்டு இங்கே இருக்கிறது பஞ்சாப் நேஷனல் பேங்க். கடனை செலுத்த முடியாது என்று டேக்கா கொடுத்து விட்ட நீரவ் மோடி லண்டனில் செட்டில் ஆகி இருக்கிறார். இந்த மோசடி தொடர்பாக லண்டன் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

நீரவ் மோடி ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த சிக்கல் சின்டெக்ஸ் கம்பெனி மூலம் ஏற்பட்டிருக்கிறது .இந்த கம்பெனிக்கு அளித்த கடனை, மோசடி எனப் பஞ்சாப் நேஷனல் பேங்க். அறிவித்து இருக்கிறது .சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்கிற இந்த கம்பெனிக்கு பாங்க் கொடுத்து இருக்கும் கடன் 1,203 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையைத் தான் மோசடி கடன் என்று அறிவித்திருக்கிறது பஞ்சாப் நேஷனல் பாங்க் .இப்படி மோசடி என அறிவித்தது குறித்து மத்திய ரிசர்வ் வங்கிக்கும் நேஷனல் பேங்க் தகவல் கொடுத்து இருக்கிறது.

ஒரு கடன் கணக்கை , மோசடி என அறிவித்துவிட்டால், மீதம் இருக்கும் மொத்த கடன் தொகையையும் தனி ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மோசமான மற்றும் வராக்கடன் என்ற பிரிவுக்கு மாற்றிவிட வேண்டும். இதை ஒரே முறையில் அல்லது நான்கு காலாண்டு காலத்துக்குள்ளாக மாற்றம் செய்துவிட வேண்டும்.இதன்படி இந்த வாங்கி சிண்டெக்ஸ் கம்பெனிக்கு கொடுத்து இருக்கும் கடனில் 215.21 கோடி ரூபாயை ஏற்கனவே வராக்கடன் பிரிவிற்கு மாற்றியிருக்கிறது .

பஞ்சாப் நேஷனல் பேங்க் கொடுத்திருக்கும் கடனில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் இப்படிச் சிக்கலில் இருக்கிறதோ தெரியவில்லை.சிண்டெக்ஸ் கம்பெனி பஞ்சாப் நேஷனல் பேங்க் மட்டுமல்லாமல் , பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் கடன் வாங்கி இருக்கிறதாம்.

கடந்த மார்ச்சு மாத நிலவரப்படி சிண்டெக்ஸ் கம்பெனியின் மொத்த கடன் தொகை 7 ஆயிரத்து 158 கோடியாக உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.இப்போது பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்தது போல, சிண்டெக்ஸ் கம்பெனிக்கு கடன் கொடுத்த மற்ற வங்கிகளும் வரிசையாகக் கடன் தொகைகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார பிரச்சனைகளால், இன்னும் எத்தனை கம்பெனிகள், இப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிக்கலில் தவிக்கிறது என்பது தெரியவில்லை. அதுமட்டுமல்ல இப்படி சின்டெக்ஸ் கம்பெனி போல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் கம்பெனிகளால் இன்னும் எத்தனை வங்கிகளில் சிக்கல் உருவாகப் போகிறதோ என்பதும் தெரியவில்லை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :