கொச்சியில் கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்து 2 வீரர்கள் மரணம்.

கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள கடற்படை வீரர்கள் தினமும் கிளைடர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல இன்று காலை 6 மணியளவில் கடற்படை வீரர்களான ராஜீவ் ஜா மற்றும் சுனில்குமார் ஆகிய இருவர் பயிற்சிக்காக கிளைடர் விமானத்தில் புறப்பட்டு சென்றனர். பயிற்சி முடித்து மீண்டும் இவர்கள் கடற்படை தளத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக கிளைடர் கட்டுப்பாட்டை இழந்து கீழே அங்குள்ள ஒரு பாலத்தின் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் ராஜீவ் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து கடற்படை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு கடற்படை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுனில் குமார் மற்றும் ராஜீவ் ஜா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்து இரண்டு வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடன் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு கடற்படை வீரர்கள் உடனடியாக செல்லவில்லை என்றும், நீண்ட நேரம் கழித்தே மீட்பு பணி நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds