கேரளாவில் எகிறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 10 ஆயிரத்தை தாண்டியது

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.


இந்தியாவில் டெல்லி, மகராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோது கேரளாவில் மட்டும் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. கேரளாவில் மேற்கொண்டு வரும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை உள்ளது என கூறப்பட்டது. ஆனால் இந்த நிலை தற்போது மாறிவிட்டது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த இரு வாரங்களாக சராசரியாக நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த வாரம் முதன்முதலாக நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில் இன்று அதிகபட்சமாக இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 10,606 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் மிக அதிகமாக 1,576 பேருக்கு நோய் பரவியுள்ளது. ஒரு மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 1,500ஐ கடப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும் கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக நோய் பரவுவதை தொடர்ந்து கேரளாவில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் உட்பட நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் முதல் கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds