விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதம் ஆவது ஏன்?

70க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகிறது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டது. இந்தியாவின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் இது, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் (2022) நிறைவேற்றத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு 10 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் டிசம்பர் மாதம் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்த திட்டம் மேலும் ஒரு வருடத்திற்குத் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணிபுரிந்து வரும் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தான் இதற்குக் காரணமாகும்.தற்போதைய இந்த சூழ்நிலையில் முன்னர் திட்டமிட்டபடி அடுத்த வருடம் ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் மாநாட்டில் ஆன்லைன் மூலம் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனா காரணமாக இஸ்ரோ சார்பில் ஏற்கனவே திட்டமிட்டபடி செயற்கைக் கோள்களை ஏவ முடியவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இப்பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறி வருவதால் விரைவில் ராக்கெட்டுகளை ஏவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிஎஸ்எல்வி சி49 ராக்கெட்டில் ரிசார்ட் 2 பி ஆர் 2 செயற்கைக்கோள் ஏவப்படும். இந்த ராக்கெட்டில் சில வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி செய்கின்றன. நம்முடைய விண்வெளி ஆராய்ச்சிக்காக 50 நாடுகளுடன் 250 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ககன்யான் திட்டம் தாமதமடையும் என்றாலும், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :