கொரோனா அறிகுறிகளுடன் இறந்த நாயின் பிரேதப் பரிசோதனை நடத்திய டாக்டருக்கும் கொரோனா

கேரளாவில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் இறந்த நாயின் பிரேதப் பரிசோதனை நடத்திய கால்நடை டாக்டருக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டியம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவருக்கு கொரோனா பரவியது.இவர்கள் தங்கள் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த நாய்க்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. மூச்சுத் திணறலும், வயிற்றுப் போக்கும் காணப்பட்டது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த நாய் உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அங்குச் சென்று பரிசோதனைக்காக நாயின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அந்த நாய்க்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த நாயின் உடல் உறுப்புகள் கூடுதல் பரிசோதனைக்காக போபாலில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நாய்க்குப் பிரேதப் பரிசோதனை நடத்திய ஒரு டாக்டருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து நாய்க்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட கால்நடை மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டது. டாக்டருடன் பணியிலிருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :