ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நின்று அரிசி வாங்கிய முன்னாள் அமைச்சர்.

கேரள முன்னாள் அமைச்சரான பந்தளம் சுதாகரன் ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நின்று அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவை கேரள உணவுத்துறை அமைச்சரான திலோத்தமன் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து பந்தளம் சுதாகரனுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். ரேஷனில் பொருட்கள் வாங்குவதை இப்போதும் கவுரவ குறைச்சலாக நினைப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பந்தளம் சுதாகரனுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. நேரம் கிடைக்கும்போது இவர் தன்னுடைய ரேஷன் கார்டை எடுத்து கடைக்கு சென்று வரிசையில் நின்று அரிசி மற்றும் பொருட்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கத்தில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், 1978ல் காங்கிரஸ் மாணவர் சங்க துணை தலைவர் மற்றும் பொது செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். இதன் பின்னர் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர், பொதுச்செயலாளர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 3 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த இவர், கருணாகரன் மற்றும் ஏ.கே.அந்தோணியின் அமைச்சரவையில் 1991 முதல் 96 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கலால், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். இவரது சொந்த ஊர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் என்றாலும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள சாஸ்தமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முன்னாள் அமைச்சராக இருந்தாலும் ரேஷன் கடையில் அரிசி மற்றும் பொருட்கள் வாங்குவதை இவர் நிறுத்தவில்லை. நேரம் கிடைக்கும்போது நடந்து சென்று வீட்டுக்கு அருகே உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது இவரது வழக்கம்.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வழக்கம் போல ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். அப்போது அங்கிருந்த ஒருவர் அதை தனது செல்போனில் போட்டோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப் உட்பட சமூக இணையதளங்களில் பகிர்ந்தார். நிமிட நேரத்தில் இந்த போட்டோ வைரலானது. இது குறித்து அறிந்த கேரள உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன், அந்த புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கிலும் பகிர்ந்தார். மேலும் பந்தளம் சுதாகரனின் இந்த செயல் பெரிதும் பாராட்டுக்குரியது என்றும், இதன் மூலம் கேரள பொது விநியோகத்திற்கு ஒரு மரியாதை கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான மணியன் பிள்ளை ராஜு என்பவர் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கியது பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :